சோழபுரம் பெண்கள் மதரஸாவில் முப்பெரும் விழா

சோழபுரம் நூருல் ஹூதா பெண்கள் மதரஸாவில் நடந்த முப்பெரும் விழாவில் 7 மாணவிகள் முபல்விகா பட்டம் பெற்றனர்.

Update: 2024-03-04 05:50 GMT

முப்பெரும் விழா 

சோழபுரத்தில் நூருல் ஹூதா பெண்கள் மதரஸா நான்காம் ஆண்டு முபல்விகா பட்டமளிப்பு விழா ஆறாம் ஆண்டு நிறைவு விழா அல் மதரசத்துல் பாத்திமிய்யா ஆண்டுவிழா என முப்பெரும் விழா சோழபுரம் ஜும்மா சின்ன பள்ளிவாசல் மேலத்தெருவில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் டெல்டா வணிக நலச்சங்கம் கூட்டமைப்பு தலைவர் ச. முகமதுசுகைல் மற்றும் கீழப்பள்ளிவாசல் நாட்டாமை அலிக்குள் ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஜும்மா சின்ன பள்ளிவாசல் நிர்வாகிகள் தலைவர் முகமதுபாசித் தலைமையில் துணைத் தலைவர் ஷாஜகான், செயலாளர் முகமதுஆரிப், பொருளாளர் ஜுபைர் அலி, துணைச் செயலாளர் அப்துல்அலீம், உறுப்பினர்கள் பக்கீர் முகமது ஜாகிர் உசேன் ஜின்னா உள்ளிட்டோர் முன்னிலையில் தலைமை இமாம் ஹாஜி முகமதுல் ஹசன் வழிநடத்துதன்படி 65 மாணவ மாணவிகள் பரிசு பெற்றனர். ஏழு மாணவிகள் முபல்விகா பட்டம் பெற்றனர்.

Tags:    

Similar News