நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூபாய் 17 லட்சத்திற்கான காசோலையை மேயரிடம் வழங்கிய பொதுமக்கள்

திருப்பூர் 53 வது வார்டு குப்பாண்டம்பாளையம் பொதுமக்கள் மழை நீர் வடிகால் கட்டுவதற்காக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 17 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர்.

Update: 2024-02-21 07:33 GMT

காசோலையை மேயரிடம் வழங்கிய பொதுமக்கள் 

திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-4, வார்டு -53 குப்பாண்டம்பாளையம் ஓடை முதல் சக்தி அபார்ட்மெண்ட் வரை மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.51 இலட்சத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.17 இலட்சத்திற்கான வரைவோலையை இன்று வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமாரிடம் அப்பகுதி மக்கள் வழங்கினர். உடன் வீரபாண்டி பகுதி கழகச் செயலாளர் கோவிந்தராஜ் ,56-வது மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News