குளித்தலை அருகே இருதரப்பினரிடையே மோதல் - 12 பேர் கைது

Update: 2023-11-21 06:46 GMT

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவல்காரன்பட்டியில் ஸ்ரீ அய்யனார் கோவில் உள்ளது. குறிப்பிட்ட சமூகத்திற்க்கான குலதெய்வ குடிபாட்டு கோவிலானது புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது, மற்றொரு பிரிவினர் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை இரு தரப்பினரிடையே மோதல் உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட மற்றொரு பிரிவினர் கோவிலுக்கு எப்படி வரலாம் என கேட்டு இருதரப்பினரிடையே மோதல் உருவாகி, ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியும்,கைகளால் தாக்கியும் உள்ளனர். இந்த சம்பவம் அறிந்த, தோகைமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினரை சேர்ந்த 12 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, பின்னர் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர். மேலும், இருதரப்பினரிடையே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News