உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் தூய்மை பணி

Update: 2023-11-09 03:22 GMT

தூய்மை பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணி திட்ட சிறப்பு முகாம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் வழக்கறிஞர் சங்க செயலாளர் திலீப் வரவேற்புரை ஆற்றினார், சிறப்பு அழைப்பாளராக நகர் மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார், நகராட்சி ஆணையர் இளவரசன் முன்னிலை வகித்தார், சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் தூய்மை பணி சிறப்பு முகாமை துவக்கி வைத்தார், இம்முகாமில் நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்வோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர், இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களின் பாதங்களை கழுவி வணங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர், இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News