பூந்தமல்லி பஸ் நிலையத்தில் மூடியே கிடக்கும் கழிப்பறை

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் கழிப்பறை மூடியே கிடக்கும் அவலத்தில் உள்ளது.

Update: 2024-03-12 17:15 GMT

மூடியே கிடக்கும் கழிப்பறை

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பயணியர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

பயணியர் வசதிக்காக, துாய்மை இந்தியா திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், நகராட்சி சார்பில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டது. இது, நான்கு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்த கழிப்பறை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், மூடியே கிடக்கிறது. இதனால், பயணியர் பேருந்து நிலைய வளாகத்தில், திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த கழிப்பறையை நகராட்சி நிர்வாகம், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News