வெள்ளகோவிலில் ரூ 36 லட்சத்து 64 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவிலில் வேளான் ஒழுங்கு முறை விற்பனை ககூடத்தில் வாரந்தோரம் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். அந்த வகையில் நேற்று ரூ 36 லட்சத்து 64 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது.

Update: 2024-03-27 11:15 GMT

தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் புளியம்பட்டி பெட்டவாய்த்தலை, பாலப்பட்டி, வாணியம்பாடி, சிவகிரி, திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 878 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெள்ளகோவில், முத்தூர், ஆர்.எஸ்.ஊத்துக்குளி, குருநாதன் கோட்டை, சிவகிரி, பரமத்தி பகுதியில் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.93.69-க்கும் இரண்டாம் தரமான தேங்காய் பருப்பு ரூ.88.88க்கும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.36 லட்சத்து 64 ஆயிரத்து 399 விற்பனை நடைபெற்றது என்று ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
Tags:    

Similar News