ஆரணியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

ஆரணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் இன்று நடைபெற்றது.

Update: 2024-04-08 11:59 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் இன்று நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் அலமேலு, இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் பிரதீப் குமார், மகளிர் அணி வள்ளி, பாஜக, பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News