குமரியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
குமரியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-16 15:56 GMT
ஆலோசனை நடத்திய ஆட்சியர்
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் இன்று (16.04.2024) கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இதில் தேர்தல் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையம், C-VIGIL மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ்
குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.