கடலில் மாயமானவர்  குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் அரசு நிவாரணம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் மாயமானவர்  குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் அரசு நிவாரண தொகையை கலெக்டர் வழங்கினார்.

Update: 2024-03-16 18:10 GMT
கடலில் மாயமானவர் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி வழங்கிய கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்டம்,  குளச்சல் பகுதியை  சார்ந்த இப்ராஹீம் மகன் முகைதீன் யாசர் அலி என்பவர் கடந்த 08.01.2024 அன்று கடலுக்குள் தவறி விழுந்து மாயமானார். இதை அறிந்த தமிழக முதலமைச்சர் காணாமல் போனவரின் குடும்பத்தினற்கு இரங்கல் தெரிவித்ததோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து   ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.        

அதன் அடிப்படையில் காணாமல் போனவரின் தாயார் ஹைருன் நிஷா மற்றும் மனைவி செய்யதலி பாத்திமா ஆகியோரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் , குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து  ரூ.3 இலட்சத்திற்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது.

Tags:    

Similar News