கலெக்டர் ஆய்வு

புங்கேரியில் கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-28 02:21 GMT

 புங்கேரியில் கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் வட்டம் பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி புங்கேரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் புங்கேரி பாசன கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அனாமிகா,, ரமேஷ் உதவி ஆட்சியர் பயிற்சி ஆனந்தகுமார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்..
Tags:    

Similar News