கிருஷ்ணகிரியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ஆய்வு !
கிருஷ்ணகிரியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-20 04:43 GMT
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 யொட்டி, 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சி. விஜில் ஆப் மூலம் வரப்பெற்ற புகார்கள் மற்றும் பதிவேடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.