அஞ்சல் வாக்கு பெறும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

குமாரசாமிபேட்டை பகுதியில் மூத்த குடிமக்கள், வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அஞ்சல் வாக்கு பெறும் பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-05 09:19 GMT
இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024ஐ முன்னிட்டு, தருமபுரி நகராட்சி, குமாரசாமி பேட்டை பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அஞ்சல் வாக்கு பெரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி ஆகியோர் இன்று ஆய்வு செய்தார். உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொறுப்பு அலுவலர் திருமதி.தேன்மொழி உள்ளார். இதைத் தொடர்ந்து அப்பா நகர் காந்திநகர் கடைவீதி சந்தப்பேட்டை இலக்கியம்பட்டி செந்தில் நகர் போன்ற பகுதிகளில் இல்லங்களுக்கு சென்று அஞ்சல் வாக்கு பெரும் பணிகள் நடைபெற்றது.
Tags:    

Similar News