தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கிய கலெக்டர்!

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழகினார்.

Update: 2024-04-09 11:38 GMT

ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா 

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில், 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட,180-புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, நடைபெற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா துவக்கி வைத்து பார்வையிட்டு, அரசு பேருந்துகளில் பயணம் செய்த வாக்காளர்களுக்கு, தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி, நகராட்சி ஆணையர் (புதுக்கோட்டை/அறந்தாங்கி (பொ) ஷியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News