வங்கியாளர்களுடன் ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-30 17:30 GMT

ஆலோசனை கூட்டம் 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அரசின் சார்பில் வழங்கப்படும் கடன் உதவி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வங்கியாளர்களுடன் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பேசுகையில்

,"மக்கள் பயன்பெறும் வகையில் வங்கியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வங்கி கடன் உதவிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகை கடன் வழங்கும் பொழுது பொது மக்களிடம் கனிவுடன் நகை கடன்களை வழங்கிட வேண்டும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட வங்கி கணக்கு துவங்க முன்னுரிமை வழங்க வேண்டும்,"என அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீ ராம்ஜி குமார், தாட்கோ மேலாளர் சரண்யா மற்றும் பிற வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News