குமாரபாளையத்தில் தனியார் கல்லூரி மாணவி மாயம்

குமாரபாளையத்தில் தனியார் கல்லூரி மாணவி மாயாமானார்.

Update: 2024-04-25 10:12 GMT

மாயமான மாணவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை பகுதியில் வசிப்பவர் காந்தரூபன், 41. கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி இவரது 19 வயது மகள், அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஏப். 16ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் காணாமல் போனார்.

இது குறித்து இவரது தந்தை காந்தரூபன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News