பெற்றோர் பணம் தர மறுத்ததால் கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவன் கைது !

பெற்றோர் பணம் தர மறுத்ததால் கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-11 12:33 GMT
பெற்றோர் பணம் தர மறுத்ததால் கொள்ளையடிக்க முயன்ற கல்லூரி மாணவன் கைது. கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் எல்லைக்குட்பட்ட, முத்தலாடம்பட்டி அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் பிரவீன் வயது 19. இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாவை பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சைபர் செக்யூரிட்டி என்ற படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். மகனின் நடத்தை கண்டு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மார்ச் 9ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில், முத்துலாடம்பட்டியில் உள்ள மணிகண்டன் என்பவரது வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்தி உள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்தனர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி. அப்போது பிரவீன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டி உள்ளார். இதனால் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கூச்சலிட்டுள்ளனர். பிரவீன் மணிகண்டன் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மணிகண்டனுக்கு வலது புறம் மார்பு, இடது தோள்பட்டை, வலது கால் தொடை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவரது மனைவி சுப்புலட்சுமிக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சுப்புலட்சுமி முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பிரவீனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோனிமலை காவல்துறையினர்.
Tags:    

Similar News