கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே மது அருந்தி புத்தாண்டு கொண்டாடியதை பெற்றோர் கண்டித்ததால், கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-01-03 05:31 GMT

பைல் படம் 

ஓட்டப்பிடாரம் அருகே மது அருந்தி புத்தாண்டு கொண்டாடியதை பெற்றோர் கண்டித்ததால், கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் செல்லச்சாமி. இவருடைய மகன் அருண்ராஜ் (18), ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவில் அருண்ராஜ் அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாடினார்.

பின்னர் அதிகாலையில் அவர் தனது வீட்டுக்கு திரும்பி சென்றார். அப்போது அருண்ராஜை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருண்ராஜ் தனது வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றடு அருண்ராஜின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News