காரைக்குடியில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் கல்லூரி மாணவர்கள்

காரைக்குடியில் ஆபத்தான முறையில் கல்லூரி மாணவர்கள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2023-12-24 13:16 GMT

ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

காரைக்குடியில் டவுன் பஸ்களில் மாணவர்கள் படிகளில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். காரைக்குடியிலுள்ள பள்ளி கல்லுாரிகளுக்கு சாக்கோட்டை, புதுவயல், மானகிரி, பள்ளத்தூர், அமராவதிபுதூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவர்கள் பஸ்சில் வந்து செல்கின்றனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்ல டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் மாணவர்கள் படிகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில், கூடுதல் பஸ்களை இயக்குவதோடு அவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News