தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
ஆரணி அதிமுக எம்.எல். ஏ. சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
Update: 2023-12-06 09:22 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் எம்ஜி.ஆர் சிலை அருகே ஆரணி அதிமுக எம். எல்.ஏ.சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7ம் ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் ஊர்வலமாக வந்தனர். மேலும் காந்தி சாலை மார்க்கெட் சாலை வழியாக ஊர்வலமாக வந்து பழைய பேருந்து நிலைய எம். ஜி.ஆர் சிலை அருகே ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து நகர மன்ற துணை தலைவர் பாரி பாபு தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் இதில் ஒன்றியசெயலாளர்கள் கஜேந்திரன், திருமால்,மாவட்ட பொருளாளர் கோவிந்தராசன், நகரமன்ற உறுப்பினர்கள் சுதா குமார், பானுப்ரியா பாரதிராஜா, மோகன், ஒன்றிய பேரவை செயலாளர் பையூர் சதிஷ் இ.பி.நகர் குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.