முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-05-22 16:20 GMT

ராஜீவ் காந்தி நினைவு தினம் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-ஆவது நினைவு தினத்தையொட்டி,காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் காங்கிரஸ் கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்று கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தலைவர் எஸ். பிரசாத் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tags:    

Similar News