வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி துவக்கம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள 16.07 லட்சம் வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி (பூத் சிலிப்) தொடங்கப்பட்டது.

Update: 2024-04-03 09:11 GMT

மொ.நா.பூங்கொடி 

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7,80,096 ஆண்கள், 8,26,737 பெண்கள், 218 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 16,07,051 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். 1821 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி (பூத் சிலிப்) செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மொ.நா.பூங்கொடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
Tags:    

Similar News