கல்குவாரி டெண்டர் எடுப்பதில் போட்டி

கல்குவாரி டெண்டர் எடுப்பதில் போட்டி ஏற்பட்டதால் டெண்டரை நிறுத்திவைத்த ஆட்சியர்.

Update: 2023-10-31 03:59 GMT

கல் குவாரி டெண்டர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்டத்தில் 31 குவாரிகளை நடத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டு இருந்தது அதற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க அக்டோபர் 30ஆம் தேதி கடைசி நாள் என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெண்டர் எடுக்க விண்ணப்பிக்க பலர் கூடியிருந்தனர், இந்நிலையில் டெண்டர் கோரி விண்ணப்பிக்க வந்த போது திமுகவினர் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் கற்பகம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இதை கண்டுகொள்ளாத நிலையில் ரகலையில் ஈடுபட்டுள்ளனர் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவியை வரவைத்த ஆட்சியர் டெண்டர் முறையாக நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக் கொண்டார் ஆனால் விண்ணப்பிக்க வந்தவர்கள் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டதால், இந்த கல்குவாரி ஏலம் தற்காலிகமாக ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் இந்த ரகளை சம்பவத்தில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அலுவலகதில், அலுவலர்களும் தாக்கப்பட்டு மேலும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Tags:    

Similar News