வேடசந்தூரில் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் மனு

வேடசந்தூரில் மின்வாரிய ஊழியர்கள் மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-09 06:38 GMT

மனு அளித்தவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்துடன் மின்வாரிய ஊழியர்கள் செயல்படுகின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரப்பு செய்து மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நாங்கள் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் நேரத்தில் நல்ல வாக்குறுதிகளை தருகின்றனர். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மாயமாய் விடுகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுத்து அதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News