பைக் மீது மிளா மோதி அரசு பேருந்து நடத்துனர் பலி

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள் மீது மிளா மோதி அரசு பேருந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-25 01:30 GMT

விபத்து

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (53). இவர் கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை பணிக்கு செல்வதற்காக உறவினர் பென்னட் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை பென்னட் ஓட்ட தனபால் பின்னால் அமர்ந்து இருந்தார்.

பொற்றையடி சாய்பாபா கோவில் அருகே செல்லும்போது புத்தனாறு கால்வாயில் இருந்து ஓடி வந்த மிளா ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர். மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி தனபால் நேற்று உயிரிழந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News