உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற பணம் பறிமுதல்
செய்யாறில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.75 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-11 07:50 GMT
பணம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் கண்காணிப்பு குழு அலுவலர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.75 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை செய்யாறு உதவி ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.