தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து....

தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 2-வது முறையாக பெரம்பலூர் மாவட்ட வீரர்கள்-வீராங்கனை வெற்றி பெற்று சாதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் வாழ்த்து.

Update: 2024-04-05 07:18 GMT
வெற்றி

தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 2-வது முறையாக பெரம்பலூர் மாவட்ட வீரர்கள்-வீராங்கனை வெற்றி பெற்று சாதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் வாழ்த்து. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள்-வீராங்கனை தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 2-வது முறையாக முதலிடம் மற்றும் 2-வது இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்-வீராங்கனைகளான மேலப்புலியூரைச் சேர்ந்த கலைச்செல்வன், புதுஅம்மாபாளையம் ரம்யா, மங்கலமேடு அம்பிகாபதி, ஆதனூரைச்சேர்ந்த ஜீவா, ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்றனர் இதனை தொடர்ந்து மீண்டும் நேற்று பெரம்பலூர் திரும்பினர்.

தேசியஅளவில் சாதனை புரிந்த 3 பேரும், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பொம்மி, மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் மணிவண்ணனஆகியோர் சால்வே அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட . கல்வி ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், சிறப்பு ஆசிரியை மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News