அம்பேத்கர், வசந்தகுமாருக்கு காங்கிரசார் மரியாதை

சட்டமேதை அம்பேத்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயல் தலைவர் வசந்தகுமார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2024-04-15 02:30 GMT

சட்ட மாமேதை அம்பேத்கரின் 134 - ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமையில் அம்பேத்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயல் தலைவர் வசந்தகுமார் ஆகியோரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் அம்பேத்கர் இயற்றிய சட்டங்களைப் பற்றி கட்சி நிர்வாகிகளிடையே எடுத்துரைத்தார்.. இதற்கு முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ  பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி பெருமாள் சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News