கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் மத்திய பா.ஜ., அரசு மற்றும் வருமான வரித்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-04-02 04:11 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் மத்திய பா.ஜ., அரசு மற்றும் வருமான வரித்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.


கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் மத்திய பா.ஜ., அரசு மற்றும் வருமான வரித்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், கலை பிரிவு கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

நகர தலைவர் குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா, வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ், இளவரசன், வட்டார தலைவர்கள் அசோக், சரண்ராஜ், ரகோத்தமன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், காங்., வங்கி கணக்கை முடக்கி 1,823 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறையை கண்டித்தும், இதற்கு வித்திட்ட மத்திய பா.ஜ., ஆட்சியை கண்டித்தும் பேசினர்.

Tags:    

Similar News