காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

குழித்துறையில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-01-23 09:25 GMT
குழித்துறையில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடா யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் நேற்று அசாம் மாநிலத்தில் யாத்திரையில் சென்று கொண்டிருந்த போது கோவிலில் வழிபட சென்றார்.  அப்போது அங்கு வந்த பாரதிய ஜனவினர் கோவிலின் உள்ளே நுழைவு விடாமல் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தினர்.        

இதற்கு  கண்டன தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார். விஜய் வசந்த் எம் பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் ஏராளம் காங்கிரஸ் நிர்வாகிள், தொண்ட் கார் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News