காவலருக்கு அரிவாள் வெட்டு - டி.ஐ.ஜி, எஸ் பி நேரில் விசாரணை

வழக்கு விசாரணைக்காக சென்றபோது குற்றவாளியால் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலரை டி ஐ ஜி, எஸ் பி நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Update: 2023-11-05 04:11 GMT
சிகிச்சை பெற்று வரும் காவலரை சந்தித்த டி ஐ ஜி, எஸ் பி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி இருந்தார். இவர் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக ஆஜராகாமல் இருந்ததால் க்ரைம் போலீசார் இவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பிரச்சனையில் காவலர் காளிமுத்துவை ஜேசு ராஜா அருவாளில் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். அப்போது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர் காளிமுத்துவை ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறிய டிஐஜி துரை, வழக்கு தொடர்பாக போலீசார் ஜேசுராஜ் என்பவர் வீட்டுக்கு சென்ற பொழுது குற்றவாளி அரிவாளை எடுத்து வெட்டி உள்ளார். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மேல் நடவடிக்கை தொடரும் என கூறினார்.

Tags:    

Similar News