அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 24ம் தேதி காலை 10 மணியளவில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Update: 2024-06-22 12:13 GMT

திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 24ம் தேதி காலை 10 மணியளவில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்,கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,வருகின்ற 24 ந்தேதி திங்கள கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக இன்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பகுதி கழக செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர்கள் நகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News