நாளை நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

அரியலூரில் நுகர்வோர் பாதுகாப்பு துறை தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது என கலெக்டர் ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-19 13:48 GMT

 அரியலூரில் நுகர்வோர் பாதுகாப்பு துறை தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது என கலெக்டர் ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமான குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி அரியலூர் வட்டத்தில் கருப்பூர் சேனாபதி கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டத்தில் வெண்மான்கொண்டான் கிழக்கு கிராமத்திலும், செந்துறை வட்டத்தில் கீழமாளிகை கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் மருதூர் கிராமத்திலும் நடைப்பெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் எண் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா வெள்ளிகிழமை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News