தொடரும் படிக்கட்டு பயணம்... கண்டுகொள்ளாத போக்குவரத்து நிர்வாகம் !

மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு காலைவேளையில் போதிய பஸ் வசதி இல்லாததால், பலரும் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

Update: 2023-12-21 11:20 GMT

மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு காலைவேளையில் போதிய பஸ் வசதி இல்லாததால், பலரும் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். 

மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு,தனியார் நிறுவன ஊழியர்கள் சிவகங்கைக்கு வருகின்றனர். நீண்ட வருடங்களாக மானாமதுரையிலிருந்து காலை நேரத்தில் சிவகங்கைக்கு போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் இயக்கப்படுகிற ஒரு சில பஸ்களில் ஏராளமானோர் படிகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.போக்குவரத்து கழக அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மக்கள் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு போதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News