நாங்களும் ரவுடிதான் - தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குவாதம்

திருபுவனம் அருகே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் நாங்களும் ரவுடிதான் என திமுக பிரமுகர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Update: 2024-04-08 03:09 GMT

தேர்தல் பிரசாரம் 

சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட திருப்புவனம் அருகிலுள்ள வெள்ளைகரை கிராமத்தில் கார்த்திக் சிதம்பரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் நீங்கள் இந்த பகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டு கலாட்டா செய்தனர். அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஒரு படத்தில் நானும் ரௌடி தான், நானும் ரவுடிதான் என்று கூறி செல்லும் வடிவேலை போல நாங்களும் சண்டியர்தான் எங்க மேல ஏகப்பட்ட வழக்குகள் இருக்கு எங்க கிட்ட மோத வேண்டாம் என்று கூறினார். மேலும் பிரச்சார குழுவிற்கும் கீழே இருந்த பொதுமக்களுக்கும் வாக்குவாதம் நீண்டு கொண்டே இருந்தது. அப்போது திருப்புவனம் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் அங்கு வந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்
Tags:    

Similar News