சூயஸ் நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி ஆணையர்.

சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் நோட்டீஸ் வழங்கி ரூபாய் பத்து இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Update: 2024-01-19 15:49 GMT

பைல் படம்

கோயமுத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 31ல் கட்டபடும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் கட்டுமனம் பணிகள் மாநராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கடந்த 3ம் தேதிஆய்வு செய்தார். ஆய்வின் பொழுது அடிதளம் இடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் அருகாமையில் உள்ள கட்டிடங்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து பணிகளை மேற்கொள்ளுமாறு சூயஸ் நிறுவனத்திற்க்கு அறிவுறுத்தப்பட்டது.இன்று மீண்டும் மாநகராட்சி ஆணையாளர் மேற்கொண்ட கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த பொழுது மேற்கூறிய எந்த அமைப்பும் சலுகைதாரால் மேற்கொள்ளப்படவில்லை என்று கண்டறியபட்டது. இதனையடுத்து சூயஸ் நிறுவனத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் நோட்டீஸ் வழங்கி ரூபாய் பத்து இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.கோவை மாநகரில் சாலை பணிகளை மந்தமாக செய்து வருவது மெத்தன போக்குடன் செயல்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்களுக்கு ஆணையர் எச்சரிக்கை செய்வதுடன் அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News