நல்லம்பள்ளியில் ரூ.4 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனை

நல்லம்பள்ளியில் இன்று காலை கூடிய நாட்டுக்கோழிகள் வார சந்தையில் ரூ.4 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது

Update: 2024-04-21 04:11 GMT
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இன்று காலை 6 மணிக்கு நடைபெற்ற வாரச் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வியாபாரிகள் நாட்டுக்கோழிகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். அளவைப் பொறுத்து சிறிய அளவிலான நாட்டுக்கோழிகள் 300 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவிலான நாட்டுக்கோழிகள் 1300 ரூபாய் வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் நான்கு லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News