பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலி

துறையூர் அருகே நாகலாபுரம் வனப்பகுதியில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவன்,மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2024-03-21 05:05 GMT

விபத்து நடந்த இடம் 

திருச்சி மாவட்டம் துறையூர் நாகலாபுரம் பகுதியில் வசிப்பவர் சேகர் இவரது மனைவி தனலட்சுமி. சேகர் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் முசிறியில் நடைபெற்ற உறவீனரின் இல்ல வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தங்களது மோட்டார் பைக்கில் சென்றுள்ளனர்.பின்னர் வளைகாப்பு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

அப்போது நாகலாபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இவர்களுக்கு பின்னால் வந்த கார் மோட்டார் பைக் மீது மோதியது. இதில் கணவன்,மனைவி நிலைத்தடுமாறி விழுந்ததில் தனலட்சுமிக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் கோயமுத்தூரை சேர்ந்த பூபதி என்பவர் காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது.பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சாலை விபத்தில் கணவன் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News