மரணத்திலும் இணைபிரியாத  தம்பதியர்கள்     

ஒரத்தநாடு அருகே மரணத்திலும் இணைபிரியாத  தம்பதியர்கள்     

Update: 2023-11-30 10:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கோனூர் நாடு கருக்காடிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் மு.ராமசாமி (வயது 92). அவரது மனைவி வள்ளியம்மை (வயது 85); வயது முதிர்வு காரணமாக புதன்கிழமை காலை 8.15.மணியளவில் இயற்கை எய்தினார். அவரது பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அவரது கணவர் ராமசாமி மனைவி இறந்த 4 மணி நேரத்தில் காலமானார். இருவரும் இணைபிரியாது, மனமொத்து, ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், மனைவியின் பிரிவைத் தாளாத கணவரும் மரணம் அடைந்தது அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, வியாழக்கிழமை மாலை கருக்காடிப்பட்டி கிராமத்தில் இருவரது உடலும் ஒன்றாக தகனம் செய்யப்பட்டது. இத்தம்பதியருக்கு, திருமணமான இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News