போயர் பேரவை இளைஞர் அணி நடத்திய கிரிக்கெட் போட்டி

சேலத்தில் தமிழ்நாடு போயர் இளைஞர் அணி நடத்திய கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2024-01-31 01:29 GMT

கிரிக்கெட் போட்டி

தமிழ்நாடு போயர் இளைஞர் அணி நடத்திய கிரிக்கெட் போட்டியில் சன்னியாசி குண்டு, காடையாம்பட்டி, கருப்பூர், வலசையூர், எருமாபாளையம், தாசநாயக்கன்பட்டி, ஆட்டையாம்பட்டி, கூட்டாத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பேரவை இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர். இதில் கூட்டத்துப்பட்டி அணிக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், கோப்பையும், சன்னியாசிக்குண்டு அணிக்கு 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது. பரிசுகளை மாநில தலைவர் டி.கே.மூர்த்தி வழங்கினார்.

பொதுச்செயலாளர் பெரியபொண்ணு, துணைத்தலைவர் ராஜா, தலைமை ஆலோசகர் கந்தசாமி, சேலம் மாவட்ட செயலாளர் குப்புசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் மாதேஸ்வரன், செந்தில், துணை பொருளாளர் சந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் குப்புராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சக்திவேல், ஓமலூர் நகர செயலாளர் திருக்குமரன், துணை பொதுச்செயலாளர் பொன்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாநில இளைஞர் அணி செயலாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News