மிளகாய் செடிக்குள் கஞ்சா செடி வளர்ப்பு - இளைஞர் கைது

முதுகுளத்தூர் அருகே விவசாய நிலத்தில் மிளகாய் செடிக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-03 06:38 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள மேலத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் முனியசாமி(39) இவர் அதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் வயலை குத்தகைக்கு எடுத்து அதில் பருத்தி மற்றும் மிளகாய் சொடிகள் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் மிளகாய் செடிக்கு நடுவே இரண்டு கஞ்சா செடிகள் வளர்த்து வந்துள்ளார். இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் கஞ்சா செடியை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து, கீழத்தூவல் போலீசார் முனியசாமியை கைது செய்தனர்.
Tags:    

Similar News