ஜூஸ் கடையில் சிலிண்டர் வெடித்து பொருட்கள் சேதம்

கேளம்பாக்கம் அருகே ஜூஸ் கடையில் சிலிண்டர் வெடித்து பொருட்கள் சேதம்.

Update: 2024-03-20 10:27 GMT

தீ விபத்து  

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே நாவலுாரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பல்வேறு கடைகள் உள்ளன. இதில் வாகன நிறுத்தம் அருகே சிறிய அளவில் டீ மற்றும் ஜூஸ் கடை உள்ளது. வழக்கம்போல் நேற்று காலை 6: 00 மணிக்கு கடை திறந்து, மூன்று பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கடையில் நான்கு காஸ் சிலிண்டர் இருந்துள்ளன. காலை 7: 30 மணிக்கு, ஒரு காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, தீப்பிடிக்க துவங்கியது. இதை அறிந்த மூன்று பணியாளர்களும், கடையிலிருந்து வெளியேறினர். பின் அடுத்தடுத்து இரண்டு சிலிண்டர்கள் வெடித்து தீயானது மள மளவென பரவி புகைமூட்டம் அதிகம் காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த சிறுசேரி தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், கடையில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. இதுகுறித்து தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News