உடல் நலக்குறைவால் தொழிலாளி உயிரிழப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே உடல் நலக்குறைவால் தொழிலாளி உயிரிழப்பு. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

Update: 2024-02-06 09:03 GMT

தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேலராதாம்பூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளி மணிவேலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மணிவேல் மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News