கடனை திருப்பி கேட்ட நபர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்

வாணியம்பாடி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபர், பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-06-11 02:09 GMT

வாணியம்பாடி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபர், பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி! நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்! திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல் நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ரஜினிகுமாரிடம் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பணம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டு பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணாவில் விடுபட்டதால் பரபரப்பு..

Tags:    

Similar News