சவுமியா அன்புமணி குறித்து அவதூறு: கைது செய்யக்கோரி முற்றுகை

தீவட்டபட்டியில் சவுமியா அன்புமணி குறித்து அவதூறு பரப்பியவரை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர்.

Update: 2024-04-28 09:27 GMT

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாமகவினர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பொம்மியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கோவையில் வேலை செய்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே அருண்குமார் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த பா.ம.க. மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் தலைமையில் பா.ம.க.வினர் நேற்று தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் சமூக வலைதளத்தில் சவுமியா அன்புமணி குறித்து தொடர்ந்து அவதூறு கருத்து பதிவிட்டு வரும் அருண்குமாரை கைது செய்யக்கோரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரிடம் மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து அருண்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வன்னியர் சங்க நிர்வாகி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News