மதிமுக அலுவலகம் நள்ளிரவில் இடிப்பு : கடை உரிமையாளர் மீது வழக்கு

மயிலாடுதுறை அருகே வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மதிமுக அலுவலகத்தை இடித்த கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-06-17 02:23 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் திருச்சம்பள்ளியை சேர்ந்தவர் கொளஞ்சி (52) இவர் செம்பனார்கோவில் கடை வீதியில் 2000 ஆண்டு முதல் வாடகை கடையில் மதிமுக கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார் . அந்தக் கடையின் உரிமையாளர் மயிலாடுதுறை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் கொளஞ்சியிடம் கடையை காலி செய்ய சொல்லி கேட்டுள்ளார்.

காலி செய்யாததால், இதுகுறித்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது .இதற்கிடையே சம்பவ தினத்தன்று இரவில் ஜேசிபி எந்திரத்தை வைத்து அந்த கடையில் இடித்து தரைமட்டம் ஆக்கினார். இது குறித்து கொளஞ்சி செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது ஜே சி பி என்கிற மூலம் இந்த இடித்து உடைத்ததாகவும் அதில் இருந்த ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் டிவி பத்திரம் போன்றவற்றை சூறையாடியதாக கொளஞ்சி அளித்த புகார் பேரில் போலீசார் நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News