விருதுநகரில் அரசு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் டிஜிட்டல் கிராப் சர்வே செய்ய மிரட்டும் அரசு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
By : King 24X7 News (B)
Update: 2024-01-06 11:50 GMT
தமிழகத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே மூலம் கிராம நிர்வாக அலுவலர்களை பணி செய்ய வற்புறுத்துவதாகவும் மற்ற மாநிலங்களில் இந்த டிஜிட்டல் கிராப் சர்வே செய்வதற்கு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணியை தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களை செய்ய வற்புறுத்துவதாகவும் முறையற்ற அழுத்தம் வழங்குவதாகவும்,
முறையாக பயிற்சி இல்லாத அலுவலர்களை வைத்து பணியை தொடங்கவும் மிரட்டுவதாகவும் மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுவதை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.