கள்ளக்குறிச்சியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

பாமக தலைவர் அன்புமணியை இழிவாக பேசிய திமுக எம்.எல்.ஏக்களை கண்டித்து கள்ளக்குறிச்சியில் பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-24 05:44 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் ஆதரவாக செயல்படுவதாக பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டினர். இந்நிலையில் நேற்று, சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் பா.ம.க., தலைவர் அன்புமணியை இழிவாக பேசியதாக கூறி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கள்ளச்சாராயத்திற்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News