பழனியில் காட்டுப்பன்றியை சுட்டுக் கொள்வதற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
பழனியில் காட்டுப்பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-08 11:11 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
காட்டுப்பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை சுட்டுக் கொள்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேட்டை நாய்களை வைத்துக் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம் பழநி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.