டிஜிட்டல் பணிக்கு உபகரணங்கள் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கலில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டிஜிட்டல் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-01-06 07:36 GMT

திண்டுக்கலில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டிஜிட்டல் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.  

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டிஜிட்டல் சர்வே பணிக்கான உபகரணங்களை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: மக்களைக் காக்கும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுகிறோம். அரசு எந்த உபகரணங்களும் தராமல் டிஜிட்டல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றால் நாங்கள் எவ்வாறு செய்ய முடியும் இது கண்டிக்கத்தக்கது. எவ்வளவு பணி வேண்டுமானாலும் நாங்கள் செய்ய தயாராக உள்ளோம். தகுந்த உபகரணங்கள் வழுங்கா விட்டால் எப்படி செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News