தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் !

தென்காசியில் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-25 05:12 GMT

ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் விஷச் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் சிலை கீழ்புறம் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் பழனி சங்கர் கேட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News